நிதியியல் நடவடிக்கைப் பணிக் குழுவின் (FATF - Financial Action Task Force) தலைமையில் நடைபெற்ற நிதி மோசடி மற்றும் தீவிரவாத நிதித் தடுப்பு குறித்த 32வது சிறப்பு யுரேசியக் குழுவின் (EAG - Eurasian Group) முழுமையான காணொளி அமர்வில் இந்தியா பங்கேற்றுள்ளது.
EAG என்பது இந்தியா, ரஷ்யா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளைக் கொண்ட ஒரு பிராந்திய அமைப்பாகும்.
2004 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இது FATFன் இணை உறுப்பினராக உள்ளது.