ஹரியானா மாநில அரசானது அரசு வேலைகள் மற்றும் அரசால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில் பொதுப் பிரிவினரில் பொருளாதார ரீதியில் பின்தங்கியோர் (Economically Backward Persons in General Category - EBPG) மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (C-பிரிவு) ஆகியோருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களைத் திரும்பப் பெற்றுள்ளது.
மேலும் அரசானது மாநில அரசின் அனைத்து துறைகளிலும் மேற்கண்ட இட ஒதுக்கீட்டு முறைப்படி ஒதுக்கப்பட்ட இடங்களை பொது / ஒதுக்கப்படாதப் பிரிவிற்கு மாற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த முடிவானது EBPG பிரிவினரைத் தவிர ஜாட், ஜாட் இன சீக்கியர்கள், ஜாட் இன இஸ்லாமியர்கள், தியாகி, ரோர் மற்றும் பிஸ்னோயிஸ் ஆகிய பிற்படுத்தப்பட்ட (பிரிவு – C) பிரிவில் சேர்க்கப்பட்ட ஆறு இனத்தவரையும் பாதிக்கும்.