நவம்பர் 05 ஆம் தேதியானது எடவலத் காகத் ஜானகி அம்மாளின் 125வது பிறந்த நாளாகும்.
இவர் ஒரு முன்னோடியான தாவரவியலாளர் மற்றும் தாவரவியல் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண்மணி ஆவார்.
மரபியல், செல் உயிரியல், பரிணாமம் மற்றும் பல துறைகளில் அறிவியலுக்கான அவரது பங்களிப்புகளுக்காக அவர் பிரபலமாக அறியப்படுகிறார்.
இவர் 1945 ஆம் ஆண்டில், பல இனங்கள் பற்றிய அவரது படைப்புகள் இடம் பெற்றுள்ள 'பயிரிடப்படும் தாவரங்களின் குரோமோசோம் தொகுப்பு' என்ற புத்தகத்தினை எழுதி உள்ளார்.
இவரது பணியைப் போற்றும் வகையில், ராயல் தோட்டக்கலைச் சமூகமானது, பல வகையான மக்னோலியா மலர்களுக்கு அவரது பெயரைச் சூட்டியுள்ளது. எ.கா: மக்னோலியா கோபஸ் ஜானகி அம்மாள்.