2022 ஆம் ஆண்டு குடும்பக் கட்டுப்பாடு (EXCELL) திட்டங்களில் முன்னிலை விருதுகளைப் பெற்ற ஒரே நாடு இந்தியா ஆகும்.
குடும்பக் கட்டுப்பாடு குறித்த சர்வதேச மாநாட்டில் 'நாடுகள் பிரிவில்' இந்தியா விருதினைப் பெற்றது.
இந்த விருதானது, சரியான தகவல் மற்றும் நம்பகமான சேவைகளின் அடிப்படையில் தரமான குடும்பக் கட்டுப்பாடு தேர்வுகளுக்கான (வசதிகள்) அணுகலை உறுதி செய்வதற்கான இந்திய அரசின் முயற்சிகளுக்கான ஒரு அங்கீகாரமாகும்.
அந்த வசதிகளின் அணுகலை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தம்பதிகள் குடும்பக் கட்டுப்பாடு குறித்த தகவலறிந்தத் தேர்வுகளை (வசதிகளை) மேற்கொள்ளச் செய்யும் நவீனக் கருத்தடை முறைகளையும் பின்பற்றுவதிலும் இந்தியா சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளது.