பாகிஸ்தான் தற்பொழுது மீண்டும் கருப்புப் பட்டியலில் நுழைவதிலிருந்து தப்பித்து உள்ளது.
FATF-ல் சீனா தலைமையேற்றதின் மூலம் இந்நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
நிதியியல் நடவடிக்கைப் பணிக் குழுவின் (FATF - Financial Action Task Force) முழுமையான மற்றும் பணிக் குழுச் சந்திப்பின் போது இம்முடிவானது எடுக்கப் பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் தேதி முதல் 2020 ஆம் ஆண்டு ஜுன் 30 வரை FATF-ன் தலைவராக சீனா உள்ளது.
2020 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் தேதியிலிருந்து FATFன் தலைமைப் பதவியை ஜெர்மனி கைப்பற்ற இருக்கின்றது. இது 2021 ஆம் ஆண்டு ஜுன் 30 வரை அதன் தலைவராக இருக்கும்.