பாகிஸ்தானை FATFன் சாம்பல் நிறப் பட்டியலில் (நிதியியல் நடவடிக்கைப் பணிக்குழு - Financial Action Task Force) சேர்ப்பதற்காக சீனாவானது இந்தியா மற்றும் அமெரிக்காவுடன் இணைந்துள்ளது.
சீனா மற்றும் சவுதி அரேபியா ஆகிய இரண்டு நாடுகளும் அமெரிக்கா, இந்தியா மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து பாகிஸ்தானின் பயங்கரவாத நிதியுதவி & பண மோசடித் தடுப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.
தற்பொழுது வரை சீனா, சவுதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய மூன்று நாடுகளும் பாகிஸ்தானை FATFன் சாம்பல் நிறப் பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கைக்கு எதிராக பாகிஸ்தானை ஆதரித்தன.
ஆனால் தற்பொழுது துருக்கி மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் மட்டுமே பாகிஸ்தானை ஆதரிக்கின்றன.
2018 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பாகிஸ்தான் சாம்பல் நிறப் பட்டியலில் வைக்கப் பட்டது.