TNPSC Thervupettagam

FIFAன் கோவிட் – 19 பிரச்சாரம்

March 28 , 2020 1576 days 538 0
  • உலக நிர்வாக அமைப்பான FIFA ஆனது (International Federation of Association Football - சர்வதேசக் கால்பந்துக் கூட்டமைப்பு மன்றம்) தனது பிரச்சாரத்திற்காக இந்தியக் கால்பந்து அணித் தலைவரான சுனில் சேத்ரி மற்றும் பிற 28 வீரர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது.
  • சுனிலைத் தவிர, உலகெங்கிலும் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்களான அர்ஜென்டினாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி மற்றும் இதர உலகக் கோப்பை வெற்றியாளர்களான கேசில்லாஸ், பிலிப் லஹம் மற்றும் கேல்ஸ் புயோல் ஆகியோரும் இதில் அடங்குவர்.
  • இந்தப் பிரச்சாரமானது கோவிட் – 19 ஐ எதிர்த்துப் போராடுவதற்காக ஏற்படுத்தப் பட்டதாகும்.
  • இந்தப் பிரச்சாரமானது “கொரானா வைரஸை ஒழிப்பதற்கான செய்தியை அனுப்புதல்” என்று அழைக்கப் படுகின்றது.
  • இந்தப் பிரச்சாரமானது உலக சுகாதார அமைப்பின் அறிவுரைகளுடன் ஒன்றிப் பொருந்தும் வகையில் 5 முக்கியமான நடவடிக்கைகளைக் கூறுகின்றது.
  • கை கழுவுதல், முகத்தைத் தொடாமல் இருத்தல், தும்மும் போது கைக்குட்டையைப் பயன்படுத்துதல், சமூக விலகல் மற்றும் வீட்டில் இருத்தல் ஆகியவை இதில் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்