கர்நாடக அரசானது, ‘உழவர் பதிவு மற்றும் ஒருங்கிணைந்தப் பயனாளிகள் தகவல் அமைப்பு’ அல்லது FRUITS என்ற செயலியை அறிமுகப் படுத்தியுள்ளது.
இது திட்டங்களுக்கான ஆதார் எண் அடிப்படையிலான, ஒற்றைச் சாளரப் பதிவுக்கான மென்பொருள் ஆகும்.
இது ஆதார் அட்டை மற்றும் கர்நாடகாவின் பூமி டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நிலப் பதிவேடு எனும் முறையைப் பயன்படுத்தி உரிமையை அங்கீகரிக்கும் ஒரு ஒற்றைப் பதிவு முறையை எளிதாக்கும்.