ஜப்பானில் இரண்டு நாட்கள் நடைபெற்ற G20 ஒகாயாமா சுகாதார அமைச்சர்கள் மாநாட்டில் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் இந்தியாவைப் பிரதிநிதித்துவப் படுத்தினார்.
அவர் துடிப்பான இந்தியா இயக்கம், சரியான உணவினை உண் எனும் பிரச்சாரங்கள் மற்றும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஆகியவற்றின் கீழ் மேற்கொண்டுள்ள சாதனைகள் ஆகியவற்றைக் கோடிட்டுக் காட்டினார்.
இச்சந்திப்பின் போது நான்கு மிக முக்கிய உலகளாவிய சுகாதார விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன. அவையாவன
அனைவருக்குமான சுகாதாரச் சேவையை அடைதல்
வயதான மக்களின் குறைகளைக் கேட்டறிதல்
சுகாதார அபாயங்களைக் கட்டுக்குள் வைத்தல்
நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அதன் கட்டுப்பாடு உள்ளிட்ட சுகாதாரம் சார்ந்த பாதுகாப்பு மேலாண்மை.