சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலைக் கண்காணிப்பிற்கான G20 நாடுகளுக்கான செயற்கைக் கோள் திட்டத்தினைத் தொடங்க இந்தியா முன்மொழிந்துள்ளது.
இது உலகின் தெற்கு நாடுகளுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த செயற்கைக்கோள் மூலம் பெறப்படும் பருவநிலை மற்றும் வானிலைத் தரவுகள் அனைத்து நாடுகளுடனும், குறிப்பாக உலகின் தெற்கு நாடுகளுடனும் பகிரப்படும்.
முன்னதாக, சார்க் (SAARC) அமைப்பு நாடுகளின் நலனுக்காக இந்தியா 2017 ஆம் ஆண்டில் ஒரு செயற்கைக் கோளை விண்ணில் ஏவியது.
இது SAARC நாடுகளுக்கான செயற்கைக்கோள் என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது.
இது இந்தியாவின் ‘அண்டை நாடுகளுக்கான ஒரு முன்னுரிமைக் கொள்கையின்‘ ஒரு பகுதி ஆகும்.
இது தெற்காசிய அண்டை நாடுகளுக்குத் தொலைபேசி வழியான மருத்துவச் சேவை, கல்விச் சேவை, வங்கி மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்புச் சேவை வாய்ப்புகள் தொடர்பான முக்கியமான தகவல்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.