G20 அமைப்பின் முதல் ஷெர்பா கூட்டம்
December 8 , 2022
592 days
290
- இந்திய அரசின் தலைமையின் கீழான முதல் G20 ஷெர்பா (அரசப் பிரதிநிதிகள்) கூட்டமானது ராஜஸ்தானின் உதய்ப்பூர் நகரில் தொடங்கப்பட்டுள்ளது.
- இந்தியாவின் G20 அரசப் பிரதிநிதியான, அமிதாப் காந்த் இந்த நான்கு நாட்கள் அளவிலான கூட்டத்திற்குத் தலைமை தாங்குகிறார்.
- ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஒன்பது சிறப்பு விருந்தினர் நாடுகள் உட்பட 19 நாடுகளின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
- சமீப காலங்களில் நிலவி வரும் மிக முக்கியமான சில பிரச்சனைகள் பற்றிய முக்கியமான உரையாடல்கள் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப் படுகின்றன.
- இந்திய அரசு, G20 அமைப்பின் ஓராண்டு காலத் தலைமைப் பதவியை 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 01 ஆம் தேதியன்று முறையாக ஏற்றுக் கொண்டது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/Picture688.jpg)
Post Views:
290