இந்திய அரசாங்கமானது, அமைச்சர்கள் உட்பட அனைத்துப் பார்வையாளர்களுக்காக G20 இந்தியா என்ற கைபேசி செயலியை அறிமுகப்படுத்தியிருந்தது.
இந்தச் செயலியானது இந்தி, ஜெர்மானியம், போர்த்துகீசியம் மற்றும் ஜப்பானியம் உள்ளிட்ட 10 மொழிகளில் இந்த உச்சி மாநாடு பற்றிய முழுமையானத் தகவலை வழங்குகிறது.
பிரதிநிதிகள், அதிகாரிகள், ஊடகப் பணியாளர்கள் மற்றும் பலருக்கு உதவியாக இருக்கும் வகையில் உச்சி மாநாடு நடைபெறும் இடத்தின் மெய்நிகர் சுற்றுப்பயண வசதியினையும் இது வழங்குகிறது.