அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப் G7 அமைப்பில் இந்தியா, ரஷ்யா, தென்கொரியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் இணைக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
உண்மையில் G8 ஆக இருந்த G7 அமைப்பானது ஒரு முறைசாரா மன்றமாக 1975 ஆம் ஆண்டில் அமைக்கப் பட்டது. இது உலகின் முன்னணித் தொழில்துறை நாடுகளின் தலைவர்களை ஒன்றிணையச் செய்கின்றது.
இந்த அமைப்பில் ஓர் உறுப்பு நாடாக ரஷ்யா 1998ல் இணைந்தது. அதன் பிறகு இந்த அமைப்பு G8 என்றானது.
ரஷ்யப் படைகள் 2014 ஆம் ஆண்டில் கிழக்கு உக்ரைனில் நுழைந்து கிரீமியாவைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து இதர G8 நாடுகள் இது குறித்து விமர்சிக்கத் தொடங்கின.
இந்த அமைப்பில் உள்ள இதர நாடுகள் G8 அமைப்பில் இருந்து ரஷ்யாவை நீக்க முடிவு செய்தன. அதன் பிறகு 2014 ஆம் ஆண்டில் இந்த அமைப்பு G7 என்றானது.