TNPSC Thervupettagam

GPAI புது டெல்லி பிரகடனம்

December 28 , 2023 206 days 187 0
  • 28 நாடுகளை உறுப்பினர்களாகத் கொண்ட உலக செயற்கை நுண்ணறிவு கூட்டாண்மை (GPAI) ஆனது புது டெல்லி பிரகடனத்தை ஒருமனதாக ஏற்றுக் கொண்டது.
  • இந்த முன்னெடுப்பானது, சாத்தியமான அபாயங்களைக் குறைக்கும் அதே வேளையில் வாய்ப்புகளைப் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை அளித்து, செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டின் போக்கை வழி நடத்த ஆயத்தமாக உள்ளது.
  • வேளாண் துறையில் செயற்கை நுண்ணறிவு சார்ந்தப் புத்தாக்கங்களை ஒரு புதிய “கருப்பொருள் சார்ந்த முன்னுரிமையாக” கருத்தில் கொண்டு ஆதரிக்கவும் இந்த பிரகடனம் ஒப்புக் கொண்டுள்ளது.
  • பக்கிங்ஹாம்ஷையரில் உள்ள பிளெட்ச்லி பூங்காவில் ஐக்கிய பேரரசின் செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு உச்சி மாநாட்டில் கையெழுத்திட்ட ஒப்பந்தத்திற்கு மாறாக இந்த அறிவிப்பு தனித்துவம் பெற்று நிற்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்