GPAI (Global Partnership of Artificial Intelligence)
June 21 , 2020 1527 days 574 0
செயற்கை நுண்ணறிவின் மீதான உலகளாவியக் கூட்டாண்மை நிறுவனத்தில் இந்தியா இணைந்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொடர்பான GPAI - உலகளாவியக் கூட்டு என்பது செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சிக்கு வழிகாட்டும் பல பங்குதாரர்களின் ஒரு முன்முயற்சி ஆகும்.
இந்தியாவுடன் இதில் இணைந்த மற்ற முன்னணி உறுப்பு நாடுகள் இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், கனடா, ஜெர்மனி, மெக்ஸிகோ, இத்தாலி, கொரியக் குடியரசு, சிங்கப்பூர், நியூசிலாந்து போன்றவை ஆகும்.
இதுவே இம்மாதிரியான முதல் முயற்சியாகும்.
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் பாரீஸில் உள்ள ஒரு செயலகம் வழியாக இந்த முயற்சி ஆதரிக்கப் படும்.