TNPSC Thervupettagam
June 1 , 2018 2240 days 676 0
  • எலான் மஸ்க் நடத்தும் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் GRACE-FO எனும் நாசாவின் இரு செயற்கைக் கோள்களை விண்ணில் வெற்றிகரமாக ஏவியுள்ளது.
  • பனி உருகுதல் மற்றும் நீரின் பெயர்வு போன்ற புவியினுடைய நீர் சுழற்சியை கண்காணிப்பதற்காக இந்த செயற்கைக் கோள் அனுப்பப்பட்டுள்ளது.
  • அமெரிக்காவின், கலிபோர்னியாவில் உள்ள வன்டென்பெர்க் விமானப் படைத் தளத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் பால்கான் 9 இராக்கெட் மூலம் இந்த செயற்கைக் கோள் ஏவப்பட்டுள்ளது.

  • GRACO-FO செயற்கைக் கோள் திட்டமானது அமெரிக்காவின் நாசாவிற்கும், புவி அறிவியலுக்கான ஜெர்மன் ஆராய்ச்சி மையத்திற்கும் இடையேயான கூட்டுத் திட்டமாகும்.
  • 2002 முதல் 2017ஆம் ஆண்டு வரை புவியினுடைய புவியீர்ப்பு விசைக் களத்தில் நிகழ்ந்த மாற்றத்தை அளவிட்டு அதன் மூலம் புவியினுடைய நீர் மற்றும் பனியினை வரைபடமிட்ட அசலான GRACE திட்டத்தின் பின்தொடரல் திட்டமே GRACE-FO திட்டமாகும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்