அமைதி காக்கும் படையினருக்கு எதிரான குற்றங்களுக்குப் பொறுப்பு ஏற்பினை மேம்படுத்துவதற்காக இந்திய நாடானது ‘நண்பர்கள் குழுமம்’ (Group of Friends) என்ற அமைப்பினைத் தொடங்கியுள்ளது.
நீல நிற தலைக்கவசம் அணிந்த இந்த படைப் பிரிவினருக்கு எதிரான அனைத்துக் குற்றங்களையும் பதிவு செய்வதற்கான தரவுத்தளமானது இதற்காக விரைவில் நிறுவப் படும்.
இந்தியா, வங்காளதேசம், எகிப்து, பிரான்சு, மொராக்கோ மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் ‘நண்பர்கள் குழுமத்தின் இணைத் தலைமையினை ஏற்றுள்ள நாடுகளாகும்.