TNPSC Thervupettagam

GST வருவாய் பற்றாக்குறை மீதான குழு

January 22 , 2019 2006 days 629 0
  • ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பின்னர் மாநிலங்கள் எதிர்கொள்ளும் வருவாய் பற்றாக்குறையை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட ஏழு உறுப்பினர்களைக் கொண்ட குழு பீகாரின் துணை முதல்வரான சுஷில் மோடி தலைமையில் இருக்கும்.
  • பஞ்சாப், குஜராத், கோவா, பீகார் மற்றும் இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஏப்ரல்-நவம்பர் மாதங்களில் வரி வசூலில் 14-37% அளவில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
  • யூனியன் பிரதேசங்களில் புதுச்சேரியானது அதிகபட்சமாக 43% பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது.
  • மிசோரம், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், சிக்கிம், நாகலாந்து ஆகிய 5 வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஆந்திரப் பிரதேசம் மட்டுமே GST அமலுக்குப் பிறகு வருவாயில் முன்னேற்றம் கண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்