2020 ஆம் ஆண்டின் காந்திய இளம் தொழில்நுட்ப புத்தாக்க விருதுகளானது ஐஐடி-கரக்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவிற்கு வழங்கப் பட்டுள்ளது.
இது சூரிய ஒளியின் கீழ் உலர்வதற்காக வைக்கப்பட்டுள்ள ஈரமான ஆடையிலிருந்து மின்சாரத்தைத் தயாரித்தலுக்கான ஒரு நடைமுறையை உருவாக்கியதற்காக அவர்களுக்கு வழங்கப் படுகின்றது.
இதே விருதானது ஐஐடி-கரக்பூரைக் சேர்ந்த மற்றொரு குழுவிற்கும் தனித் தனியாக வழங்கப் பட்டுள்ளது. இது அணியக் கூடிய மற்றும் நெகிழ்வான மின்னணு சாதனங்கள், ஆற்றல் பாதுகாப்பு மற்றும் வெப்ப மேலாண்மை குறித்த பிரச்சினைகளைக் களைந்ததற்காக அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.