அஸ்ஸாம் மாநிலத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரியான முகேஷ் சாகு “i-help” என்ற ஒரு முன்னெடுப்பை குவஹாத்தியின் ஜனதா பவனில் அறிமுகப்படுத்தினார்.
இது அஸ்ஸாம் மாநிலத்தில் டிஜிட்டல் தேர்தல் குறித்த எழுத்தறிவை ஊக்குவிப்பதற்காக அஸ்ஸாம் மாநிலத்தின் பொதுச் சேவை மையங்கள் (CSC - Common Service Centres) மற்றும் அஸ்ஸாம் மாநிலத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் ஏற்படுத்தப்பட்டதாகும்.
CSC என்பது நாடெங்கிலும் காணப்படும் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் பல்வேறு சேவைகளை அளிக்கும் இணைய வசதி கொண்ட அணுகல் மையங்களாகும்.
இந்த முழுத் திட்டமும் அம்மாநிலத்தின் முறையான வாக்காளர்கள் கல்வி மற்றும் தேர்தல் பங்கேற்பு (SVEEP - Systematic Voters Education and Electoral Participation) திட்டத்தின்கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இது அந்த மாநிலத்தில் எந்தவொரு வாக்காளரும் விடுபட்டு விடாமல் இருப்பதை உறுதி செய்கிறது.