TNPSC Thervupettagam

IBSA அமைச்சர்கள் மாநாடு

June 7 , 2018 2267 days 712 0
  • இந்தியா, பிரேஸில், தென்னாப்பிரிக்கா (India Brazil South Africa - IBSA) நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்களிடையேயான மாநாடு தென் ஆப்பிரிக்காவின் பிரிடோரியாவில் நடைபெற்றது.
  • இந்தியாவின் வெளியுறவு விவகாரத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இந்த அமைச்சர்கள் மாநாட்டிற்குத் தலைமைத் தாங்கினார்.
  • தெற்கத்திய நாடுகளிடையேயான ஒத்துழைப்பின் மீதான IBSA பிரகடனம் (IBSA Declaration on South-South Cooperation) எனுந் தலைப்புடைய ஆவணம் இந்த மாநாட்டின் வெளியீடாகும்.
  • இந்தியா, பிரேஸில், தென்னாப்பிரிக்காவினுடைய வெளியுறவுத் துறை அமைச்சர்களினால் பிரேஸிலியா பிரகடனம் (Brasilia Declaration) மூலம் 2003 ஆம் ஆண்டு இப்சா (IBSA) தோற்றுவிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்