7வது இந்தியா-பிரேசில்-தென்னாப்பிரிக்கா கடல்சார் (IBSAMAR) பயிற்சியில் பங்கேற்பதற்காக ஐஎன்எஸ் தர்காஷ் என்ற கப்பல் தென்னாப்பிரிக்காவின் எலிசபெத் துறைமுகத்தினைச் சென்றடைந்தது.
IBSAMAR என்பது இந்தியா - பிரேசில் - தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் முத்தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பின் முக்கிய ஒரு அங்கமாகும்.
இது இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா நாட்டுக் கடற்படைகளுக்கு இடையிலான ஒரு கூட்டுப் பன்னாட்டுக் கடல்சார் பயிற்சியாகும்.
முந்தைய IBSAMAR பயிற்சியானது (IBSAMAR VI) தென்னாப்பிரிக்காவின் சைமன்ஸ் டவுனில் 2018 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.