பிரிட்டனைச் சேர்ந்த மனித உரிமைகள் வழக்குரைஞரான கரீம் கான் அவர்கள் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் (International Criminal Court - ICC)புதிய வழக்குரைஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவர் இதற்கு முன்பு ஈராக்கில் இஸ்லாமிய மாகாணத் தீவிரவாதக் குழுவினால் நிகழ்த்தப்பட்ட குற்றங்களை ஆராய்வதற்கான சிறப்பு ஐக்கிய நாடுகள் குழுவிற்குத் தலைமை வகித்தார்.
ஐக்கிய நாடுகள் 193 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது, ஆனால் 123 நாடுகள் மட்டுமே ICC அமைப்பில் உறுப்பு நாடுகளாக உள்ளன.
மனித நேயத்திற்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் ஒரே நிரந்தர அமைப்பு ICC ஆகும்.