வேளாண் விஞ்ஞானி M.S. சுவாமிநாதன், புதுதில்லியில் இந்திய உணவு மற்றும் விவசாயக் குழுவால் (Indian Council of Food and Agriculture - ICFA) ஏற்படுத்தப்பட்ட முதலாவது உலக வேளாண் பரிசினைப் பெற்றிருக்கின்றார்.
குடியரசுத் துணைத் தலைவர், ICFA-வால் ஏற்பாடு செய்யப்பட்ட “சுவாமிநாதன் பருவநிலை மாற்றம் மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கான உலகளாவிய பேச்சுவார்த்தை” என்று பெயரிடப்பட்ட சிறப்பு நிகழ்ச்சியில் இவ்விருதை வழங்கினார்.
மரபணுவியல், குழியமுறைப் பரம்பரையியல், கதிர்வீச்சு மற்றும் வேதியியல் முறையிலான மரபணு மாற்றவியல், உணவு மற்றும் பல்லுயிர்ப் பெருக்கத்தின் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இவரது அடிப்படையான மற்றும் செயல்முறை சார்ந்த ஆராய்ச்சிக்காக உலகம் முழுவதும் இவர் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றார்.
ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தால் இவர் பொருளாதாரச் சுற்றுச் சூழலியலின் தந்தை எனப் புகழப்படுகின்றார்.
உலக விவசாயப் பரிசு
இந்தப் பரிசானது விவசாயத்தின் மூலமாக மனித குலத்திற்குச் சேவை புரிந்த தனிநபர்களின் சேவையை அங்கீகரித்திடும் எண்ணத்துடன் ICFA அமைப்பால் நிறுவப்பட்டிருக்கின்றது.
இது ஒரு லட்சம் டாலர்கள் பரிசுத் தொகையைக் கொண்ட ஒரு வருடாந்திர பரிசாகும்.