TNPSC Thervupettagam
April 19 , 2020 1555 days 575 0
  • சமீபத்தில் மத்திய நிதித்துறை மற்றும் பெரு நிறுவனங்கள் துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன் காணொலி மூலம் சர்வதேச நாணய மற்றும் நிதியியல் குழுவின் (IMFC - International Monetary and Financial Committee) ஒரு முழுமையான அமர்வில் கலந்து கொண்டார்.
  • இந்தச் சந்திப்பின் போது மேற்கொள்ளப்பட்ட விவாதங்களானது IMF மேலாண் இயக்குநரின் உலகளாவிய கொள்கைச் செயல்திட்டமான ”அபூர்வமான நேரம் – அபூர்வமான செயல்” என்ற ஒன்றை அடிப்படையாகக் கொண்டது. 
  • இந்த குழுவானது உலகப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் பொதுப் பிரச்சினைகள் குறித்து விவாதித்தது. இது IMFன் பணி நடவடிக்கைகள் குறித்து, அந்த அமைப்பிற்கு ஆலோசனைகளை வழங்கியது.
  • IMFC ஆனது 187 ஆளுநர்களைக் கொண்ட குழுவிலிருந்துப் பெறப்பட்ட 24 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
  • எனவே, IMFC ஆனது நிதியத்தின் அனைத்து உறுப்பு நாடுகளையும் பிரதிநிதித்துவப் படுத்துகின்றது.
  • IMFC ஆனது ஆண்டிற்கு இருமுறை அதாவது வசந்த காலம் மற்றும் வருடாந்திர சந்திப்புகள் ஆகியவற்றில் கூடி விவாதிக்கின்றது.
  • IMFC ஆனது எந்தவொரு முறையான வாக்கெடுப்பு அடிப்படையிலும் இல்லாமல், ஒருமித்த கருத்தின் அடிப்படையில் செயல்படுகின்றது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்