திட்டமிடப்பட்டதற்கு நான்கு மாதங்களுக்கு முன்னதாகவே INS இம்பால் கப்பலானது இந்தியக் கடற்படைக்கு வழங்கப்பட்டது.
இது 15B திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட, ரேடாருக்குப் புலப்படாதத் தொழில்நுட்பம் கொண்ட வழிகாட்டப் பட்ட ஏவுகணை அழிப்பான் ஏவும் ரக கப்பல்களில் மூன்றாவது கப்பல் இதுவாகும்.
பெண் அதிகாரிகள் மற்றும் மாலுமிகளுக்கான தங்குமிடத்துடன் கூடிய முதல் கடற் படைப் போர்க்கப்பல் இம்பால் ஆகும்.
INS விசாகப்பட்டினம் மற்றும் INS மோர்முகோவா போன்ற போர்க்கப்பல்கள் ஏற்கனவே படையில் இணைக்கப்பட்டுள்ள நிலையில் நான்காவது போர்க்கப்பலான சூரத் கப்பல் கட்டுமான நிலையில் உள்ளது.