மஷகான் கப்பல் கட்டும் நிறுவனம் ஆனது, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, நவீன முதன்மை போர்க்கப்பல்களான 'நீலகிரி' மற்றும் 'சூரத்' ஆகியவற்றை இந்தியக் கடற் படைக்கு வழங்கியுள்ளது.
'நீலகிரி' 17A திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இது போன்ற முதல் வகையான (FoC) கப்பல் ஆகும்.
'சூரத்' என்ற கப்பலானது 15B திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட நான்காவது கப்பலாகும் என்பதோடு மேலும், பல்வேறு பணிகள் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறன் கொண்ட ஒரு சக்தி வாய்ந்த கப்பலாகும்.
இது மீயொலி நிலம் விட்டு நிலம் பாயும் 'பிரம்மோஸ்' ஏவுகணைகள் மற்றும் 'பராக்-8' நடுத்தர தாக்குதல் வரம்பு கொண்ட நிலம் விட்டு வான் பாயும் எறிகணைகள் போன்ற ஆயுதங்களைக் கொண்டுள்ளது.