TNPSC Thervupettagam

IPCC குழுவின் தொகுப்பு அறிக்கை

April 10 , 2023 468 days 219 0
  • பருவநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழு (IPCC) ஆனது ஆறாவது மதிப்பீட்டு அறிக்கையின் (AR6) தொகுப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • உலகளாவிய வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் என்ற ஒரு வரம்பைத் தாண்டுவதைத் தடுப்பதற்கான ஒரு அவசரத் தேவையை இது எடுத்துரைக்கிறது.
  • 1901 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் உலகளாவியச் சராசரி கடல் மட்டம் ஆனது 0.20 மீட்டர் அதிகரித்துள்ளது.
  • மனித நடவடிக்கைகளின் தாக்கமானது 1950 ஆம் ஆண்டுகளில் இருந்து, பல்வேறு தீவிர நிகழ்வுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளது.
  • அடுத்தடுத்த வெப்ப அலைகள் மற்றும் வறட்சிகள் ஆகியவை மீண்டும் மீண்டும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிப்பதும் இதில் அடங்கும்.
  • ஏறத்தாழ 3.3 - 3.6 பில்லியன் மக்கள் பருவநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப் படக் கூடிய சூழல்களில் வாழ்கின்றனர்.
  • 2010 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், வெள்ளம், வறட்சி மற்றும் புயல்களால் ஏற்படும் மனித உயிரிழப்புகள் ஆனது, மிகவும் குறைவானப் பாதிப்பு உள்ள பகுதிகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் பாதிக்கப் படக்கூடிய பகுதிகளில் 15 மடங்கு அதிகமாக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்