ஒருவேளை பசுமை இல்ல வாயுவின் உமிழ்வு குறைந்தாலும், அடுத்த 20 ஆண்டுகளில் பருவநிலை மாற்றத்தினால் பல்வேறு இடர்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.
பருவநிலை மாற்றம் மீதான அரசுகளுக்கிடையிலான குழு (Intergovermental Panel on Climate Change – IPCC) தொகுத்த ஒரு அறிக்கையில் இத்தகவலானது கூறப்பட்டுள்ளது.
IPCCயின் 2வது அறிக்கையின்படி, இந்த உமிழ்வுக் குறைக்கப்படா விட்டால் இந்தியா மிகக் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
கடல்மட்ட உயர்வு மும்பை நகரத்திற்கு மிகுந்த ஆபத்தை விளைவிக்கும் என்றும், புயல் உருவாதல் கொல்கத்தா நகரத்திற்கு மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.
இந்தியாவின் அரிசி உற்பத்தி 10 முதல் 30% வரையிலும், சோள உற்பத்தி 25 முதல் 70% வரையிலும் குறையலாம் எனவும், வெப்பநிலை 1 முதல் 4°C வரை உயரலாம் எனவும் இந்த அறிக்கை கூறுகிறது.
சிந்து, அமு தார்யா, சபர்மதி, கங்கை ஆகிய ஆற்றுப் படுகைகள் பருவநிலை மாற்றத்தின் காரணமாக கடுமையான நீர்ப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் என இந்த அறிக்கை கூறுகிறது.