TNPSC Thervupettagam

ISA அமைப்பின் 29வது அமர்வு

March 25 , 2024 116 days 197 0
  • சர்வதேச கடற்படுகை ஆணையம் (ISA) ஆனது அதன் 29வது அமர்வின் முதல் பகுதியை சமீபத்தில் ஜமைக்காவில் கிங்க்ஸ்டன் நகரத்தில் தொடங்கியது.
  • ISA என்பது, 1994 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு சர்வதேச தன்னாட்சி அமைப்பாகும்.
  • இது கடல்சார் சட்டம் மீதான 1982 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் (UNCLOS) உடன்படிக்கை மற்றும் UNCLOS உடன்படிக்கையின் XI பகுதியினை செயல்படுத்துவது தொடர்பான 1994 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் நிறுவப்பட்டது.
  • இது ஒட்டுமொத்த மனித குலத்தின் நலனுக்காக கடற்படுகையில் உள்ள அனைத்து கனிம வளங்கள் தொடர்பான செயல்பாடுகளையும் ஒழுங்குபடுத்தி, கட்டுப்பாட்டுச் செயல்முறைகளை மேற்கொள்கிறது.
  • கடற்படுகை மற்றும் கடற்பரப்பு மற்றும் அதன் அடிப்பகுதி ஆகியவை தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்