இந்தியக் கடற்படையால் நடத்தப்படும் ஜப்பான் மற்றும் இந்தியா ஆகியவற்றுக்கு இடையிலான ஆறாவது கடல்சார்ப் பயிற்சியானது (JIMEX 22) வங்காள விரிகுடா கடல் பகுதியில் தொடங்கியது.
JIMEX 22 விசாகப்பட்டினத்தில் கடல் பரப்பில் நடைபெறும் பயிற்சிகள் மற்றும் துறைமுகப் பகுதியில் நடைபெறும் பயிற்சிகள் என்று இரண்டு கட்டப் பயிற்சிகளை உள்ளடக்கியது.
இந்த ஆண்டிற்கானப் பயிற்சியானது JIMEX பயிற்சியின் 10வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
இந்தக் கடல்சார் பயிற்சியானது ஜப்பானில் 2012 ஆம் ஆண்டில் தொடங்கியது.
இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான அரசுமுறை உறவுகளின் 70வது ஆண்டு விழாவுடன் இந்தப் பயிற்சியானது ஒன்றிணைந்து நடைபெறுகிறது.