TNPSC Thervupettagam
May 1 , 2020 1543 days 801 0
  • ஜவஹர்லால் நேரு வெப்பமண்டலத் தாவரவியல் பூங்கா மற்றும் ஆராய்ச்சி நிறுவனமானது (JNTBGRI - Jawaharlal Nehru Tropical Botanic Garden and Research Institute) புவி உயிரி மரபணு வரிசைப்படுத்துதல்  மீதான இந்திய முன்முயற்சி (IIEBS - Indian Initiative on Earth Bio Genome Sequencing) குறித்த உயிரியல் அறிவு மற்றும் வள மையங்களில் ஒன்றாகத் தேர்வு செய்யப் பட்டுள்ளது.
  • நாட்டில் அறியப்பட்ட அனைத்து வகையான தாவரங்கள் மற்றும் விலங்குகளின் மரபணுத் தகவல்களை குறி விளக்கம் (decode) செய்வதற்கான ஒரு நாடு தழுவிய திட்டமாக அமைய இது திட்டமிட்டுக் கொண்டு இருக்கின்றது.
  • புது தில்லியில் உள்ள தேசியத் தாவர மரபணு ஆராய்ச்சி நிறுவனமானது, மொத்தம் 24 நிறுவனங்களை உள்ளடக்கிய நாடு தழுவிய இத்திட்டத்தை ஒருங்கிணைக்கும் ஒரு மையமாகும்.
  • இந்தத் திட்டம் புவி உயிரி மரபணுத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். மேலும் அது ஒரு சர்வதேச முயற்சியாகும். அது பூமியின் யூகாரியோடிக் பல்லுயிர் பெருக்கத்தின் அனைத்து மரபணுக் குறியீடுகளையும் 10 ஆண்டுகளில் வரிசைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மரபணு வரிசைப்படுத்துதல் என்பது ஒரு உயிரினத்தின் மரபணுவின் முழுமையான டி.என்.ஏ வரிசையை ஒரே நேரத்தில் தீர்மானிக்கும் மேம்போக்கானச் செயல்முறை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்