முதலீடு செய்வதற்கு விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் அனுமதி வழங்குதலை உறுதி செய்வதற்காக ஒரு நிகழ்நேர இயங்கமைப்பை கேரள மாநில முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.
K-SWIFT (K SWIFT/Kerala Single Window Interface for Fast, Transparent Clearances - விரைவான, வெளிப்படையான அனுமதி வழங்குதலுக்கான கேரள ஒற்றைச் சாளர இடைமுகம்) என்ற செயலி 2019 ஆம் ஆண்டின் ASCEND கேரளா என்ற நிகழ்ச்சியின் போது வெளியிடப்பட்டது.
இது கேரள மாநிலத்தில் நிறுவனங்களைத் தொடங்க எதிர்பார்க்கின்றவர்களுக்கு அரசாங்க அனுமதியின் ஒப்புதலை விரைவாக மற்றும் எளிதாக வழங்குவதற்கான ஒரு மென்பொருள் செயலியாகும்.