கேரள அரசானது, கேரள ஒளியிழை வலையமைப்பினை (KFON) அதிகாரப் பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
KFON மூலம், இணைய உரிமையை ஒரு அடிப்படை உரிமையாக அறிவித்த முதலாவது மாநிலமாக கேரளா மாறியுள்ளது.
அனைத்து வீடுகளுக்கும் அரசு அலுவலகங்களுக்குமான அதிவேக அகலப்பட்டை அலை வரிசை இணையச் சேவை அணுகலை உறுதி செய்வதன் மூலம் ஒரு பெரும் டிஜிட்டல் இடைவெளியினைக் குறைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
முதன்மையாக KFON ஒரு உள்கட்டமைப்பு சேவை வழங்கும் அமைப்பாகச் செயல்படும்.