இவர் ‘சுதர்மா’ எனும் சமஸ்கிருத நாளிதழின் ஆசிரியர் (தொகுப்பாளர்) ஆவார்.
இவரும் இவருடைய மனைவியும் இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் ஆற்றியப் பணிக்காக 2020 ஆம் ஆண்டில் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதிற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
மேலும் சித்தருதா விருது, சிவராத்திரி தேசிகேந்திரா ஊடக விருது, அப்துல் கலாம் விருது மற்றும் இதர பிற விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.
சம்பத் குமார் அவர்களின் தந்தை பண்டித வரதராஜ ஐயங்கார் 1970 ஆம் ஆண்டில் “சுதர்மா” என்ற இதழைத் தொடங்கினார்.
மைசூரில் அச்சிடப்பட்டு வெளியாகும் “சுதர்மா” நாளிதழானது உலகின் ஒரே ஒரு சமஸ்கிருத நாளிதழாகும்.