கர்நாடகா அரசானது சிங்கப்பூரைச் சேர்ந்த LNG அலையன்ஸ் என்ற நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
இது மங்களூருவில், அந்த மாநிலத்தின் முதல் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு முனையத்தினை அமைப்பதற்கானஒரு ஒப்பந்தமாகும்.
இந்த முதல் LNG முனையமானது நியூ மங்களூர் துறைமுக நிறுவனத்துடன் இணைந்து கர்நாடகாவில் நிறுவப்பட உள்ளது.
2070 ஆம் ஆண்டிற்குள் நிகர சுழிய அளவில் கார்பன் உமிழ்வை அடைவதற்கு வேண்டி, எரிபொருள் சந்தைக்கு ஒரு மாற்றினை வழங்குவதற்கான மத்திய அரசினுடைய திட்டத்தின் ஓர் அங்கமாக இந்த முனையம் நிறுவப்பட உள்ளது.