இவர் அண்ணாப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் கான்பூரிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தினுடைய ஆளுநர் வாரியத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
இவர் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பில் தலைமை அறிவியல் அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.
இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்வதற்கு திமுக அரசு மேற்கொண்ட முடிவின் பின்னணியில் இருந்த நாயகன் என்று திரு. அனந்த கிருஷ்ணன் அவர்களை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் புகழ்ந்துரைத்து உள்ளார்.