தேசியக் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) ஆனது ‘MASI’ என்ற செயலியை உருவாக்கியுள்ளது.
MASI என்பது தடையற்ற ஆய்வுக்கான கண்காணிப்புச் செயலி என்பதைக் குறிக்கிறது.
நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்கள் மற்றும் அவற்றின் ஆய்வு நெறிமுறையை நிகழ்நேரக் கண்காணிப்பினை மேற்கொள்வதை இது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
அறிக்கைகளை தானாகவே உருவாக்கும் இந்தக் கண்காணிப்பு இணைய தளத்துடன் இந்தச் செயலி இணைக்கப்பட்டுள்ளது.