மரில்போன் கிரிக்கெட் குழுமமானது, சமீபத்தில் தனது கெளரவ வாழ்நாள் உறுப்பினர் அந்தஸ்துகளை வழங்கிய நபர்களின் பெயர்களை வெளியிட்டது.
விளையாட்டுத் துறைக்காகப் பங்களித்தச் சிறந்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க குழுமம் கௌரவ உறுப்பினர் அந்தஸ்துகளை வழங்கச் செய்கிறது.
இந்த உறுப்பினர்கள் பட்டியலில் இந்தியாவினைச் சேர்ந்த ஐந்து நபர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
மகேந்திர சிங் தோனி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, மிதாலி ராஜ் மற்றும் ஜூலன் கோஸ்வாமி ஆகியோர் இதில் இடம் பெற்றுள்ள வீரர்கள் ஆவர்.