ரகுவன்ஷ் பிரசாத் சிங் அவர்கள் 15வது மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
இவர் 11வது, 12வது, 13வது, 14வது மக்களவையிலும் பணியாற்றினார்.
இவர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். அதன் பிறகு அவர் பீகாரின் ஆற்றல் துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.
இவர் 2006 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தியாவின் மிகப்பெரிய நலத் திட்டமான, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கட்டமைப்பாளராக அறியப் படுகின்றார்.