2022-23 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் (MGNREGA) கீழ் ஐந்து கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்பு அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இது 2021-22 ஆம் ஆண்டில் ரத்து செய்யப்பட்ட எண்ணிக்கையை விட 247 சதவீதம் அதிகமாகும்.
2021-22 ஆம் ஆண்டில் 1,49,51,247 MGNREGA வேலைவாய்ப்பு அட்டைகள் ரத்து செய்யப் பட்டன.
2022-23 ஆம் ஆண்டில் 5,18,91,168 வேலைவாய்ப்பு அட்டைகள் ரத்து செய்யப்பட்டன.
மேற்கு வங்காளம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான ரத்துகள் செய்யப்பட்டுள்ளன.
“போலியான” வேலைவாய்ப்பு அட்டைகள், நகல் வேலைவாய்ப்பு அட்டைகள், இனி இதில் வேலை செய்ய விரும்பாதவர்கள், குடும்பங்கள் கிராமப் பஞ்சாயத்தில் இருந்து நிரந்தரமாக இடமாற்றம் செய்யப் படுதல் அல்லது ஒருவரின் மரணம் போன்ற பல காரணங்களால் இந்த ரத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.