மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (MGNREGS) கீழ் பணி ஆற்றும் தொழிலாளர்களுக்கான நலச் சேவை நிதியை உருவாக்கிய முதல் மாநிலமாக கேரளா மாறி உள்ளது.
அய்யன்காளி நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டப் பணியாளர்களும் இந்த நலச் சேவை நிதியின் ஒரு பகுதியாகப் பயன் பெறுவர்.
இது தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், மருத்துவ உதவி, அவர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவி மற்றும் இதரச் சலுகைகளை வழங்கும் நலச் சேவை நிதியாகும்.
இது 2021 ஆம் ஆண்டு கேரள வேலைவாய்ப்பு உறுதித் திட்டத் தொழிலாளர் நல நிதிச் சட்டத்தின் படி உருவாக்கப் பட்டுள்ளது.
60 வயதை நிறைவு செய்து, இந்த நிதியில் தொடர்ந்துப் பங்களிப்பினைச் செலுத்தும் தொழிலாளர்களுக்கு இந்த நிதியின் பலன்கள் வழங்கப்படும்.