TNPSC Thervupettagam

MoRTH வருடாந்திர அறிக்கை 2024

February 28 , 2025 4 days 46 0
  • சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் (MoRTH) ஆனது சமீபத்தில் 2024-25 வருடாந்திர அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • 2022 ஆம் நிதியாண்டில் 30,000 கோடி ரூபாய்க்கு மேலான இழப்புடன், நாடு முழுவதும் உள்ள மாநில சாலைப் போக்குவரத்து நிறுவனங்களின் (SRTUs) நிதி நிலைமை ஆனது மோசமடைந்து வருகிறது.
  • இது மூன்று ஆண்டுகளில் பதிவான இழப்புகளில் சுமார் 68 சதவீதம் அதிகரிப்பைக் குறிக்கிறது.
  • 2021 ஆம் நிதியாண்டில், 58 SRTU நிறுவனங்களில் பதிவான மொத்த இழப்பு 29,000 கோடி ரூபாய்க்கு மேலாகும்.
  • 2021, 2020 மற்றும் 2019 ஆகிய நிதியாண்டுகளில் வாகனப் பயன்பாட்டு விகிதம் ஆனது முறையே 62.54 சதவீதம், 87.56 சதவீதம் மற்றும் 88.6 சதவீதமாக இருந்தது.
  • 2020 ஆம் நிதியாண்டில் போக்குவரத்து கட்டமைப்புப் பயன்பாட்டு விகிதம் ஆனது 74.03 சதவீதமாக இருந்ததோடு இது 2022 ஆம் நிதியாண்டில் 68.49 சதவீதமாகக் கணிசமாகக் குறைக்கப்பட்டது.
  • நகர்ப்புறச் செயல்பாடுகளுக்காக என்று மட்டும் அறிமுகப்படுத்தப்பட்ட மொத்தம் 97,165 நகரங்களுக்கு இடையேயான பேருந்துகள் மற்றும் சுமார் 48,325 பேருந்துகளில், முறையே சுமார் 356 மற்றும் 10,517 பேருந்துகள் மட்டுமே "மிகவும் முழுமையாக சக்கர நாற்காலி பயன்படுத்தக் கூடிய வகையிலானதாக" மாற்றப்பட்டுள்ளன.
  • நகரங்களுக்கு இடையேயான மற்றும் நகர்ப்புறச் செயல்பாடுகளுக்கான அணுகக் கூடிய வகையிலான பேருந்துகளின் எண்ணிக்கை (சக்கர நாற்காலி அணுகல் எதுவும் இல்லாமல்) முறையே 24,860 மற்றும் 15,308 ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்