TNPSC Thervupettagam

MSME நிறுவனங்களின் அளவுருக்களில் திருத்தங்கள்

March 28 , 2025 5 days 37 0
  • குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்களை (MSME) வகைப்படுத்தச் செய்வதற்கான வருவாய் மற்றும் முதலீட்டு அளவுருக்களில் சில குறிப்பிடத்தக்கத் திருத்தங்களை மேற்கொள்ள உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது என்பதோடு இது ஏப்ரல் 01 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
  • முன்னதாக 1 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்ட வரம்பிலிருந்து உயர்த்தப்பட்டு, 2.5 கோடி ரூபாய் அளவு வரையிலான முதலீடுகளைக் கொண்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) தற்போது குறு நிறுவனங்களாக வகைப்படுத்தப்படும்.
  • அத்தகைய நிறுவனங்களுக்கான வருவாய் வரம்பு ஆனது 5 கோடி ரூபாயிலிருந்து 10 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • முன்னதாக நிர்ணயிக்கப்பட்டிருந்த 10 கோடி ரூபாய் என்ற ஒரு வரம்பிலிருந்து இது அதிகரிக்கப் பட்டு, 25 கோடி ரூபாய் வரை முதலீடுகளைக் கொண்ட அலகுகள் ஆனது சிறு நிறுவனங்களாக வகைப்படுத்தப்பட உள்ளன.
  • அத்தகைய நிறுவனங்களுக்கான வருவாய் வரம்பு ஆனது 50 கோடி ரூபாயிலிருந்து 100 கோடி ரூபாயாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
  • முன்னதாக நிர்ணயிக்கப்பட்டிருந்த 50 கோடி ரூபாய் என்ற வரம்பிலிருந்து உயர்த்தப் பட்டு, 125 கோடி ரூபாய் வரை முதலீடுகளைக் கொண்ட MSME நிறுவனங்கள் தற்போது நடுத்தர நிறுவனங்களாக வகைப்படுத்தப்படும்.
  • நடுத்தர நிறுவனங்களுக்கான வருவாய் வரம்பு 500 கோடி ரூபாயாக இரட்டிப்பாக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்