தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி சபைக்கு (NCERT) நிகர்நிலைப் பல்கலைக் கழக அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
நிகர்நிலைப் பல்கலைக்கழகம் என்பது குறிப்பிட்ட கல்வித் துறையில் சிறந்து விளங்கும் உயர்கல்வி நிறுவனங்களுக்கான அங்கீகாரமாகும்.
இனி NCERT தற்போது தன்னிச்சையாக இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களை வழங்க முடியும்.
தற்போதுள்ள எந்தவொரு நிறுவனமும் வழங்காத, வளர்ந்து வரும் அறிவுசார் துறைகளில் ஆய்வு மற்றும் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக ஒரு புதிய நிறுவனத்தை அமைப்பதற்கு பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு NCERT விண்ணப்பிக்க இயலும்.
ஆசிரியர்களுக்குப் பட்டங்களை வழங்குவதோடு சேர்த்து, தான் வழங்க விரும்பும் பட்டப் படிப்புகள் பற்றிய தீர்மானத்தினையும் அதுவே மேற்கொள்ளும் ஒரு அதிகாரத்தினையும் அது கொண்டிருக்கும்.