TNPSC Thervupettagam

NCSK ஆணையத்தின் பதவிக் காலம் நீட்டிப்பு

February 13 , 2025 14 days 64 0
  • தேசிய சஃபாய் கரம்சாரிகள் (தூய்மைப் பணியாளர்கள்) ஆணையத்தின் (NCSK) பதவிக் காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிப்பதற்கு வேண்டி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இது சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
  • இது நாடு முழுவதும் நிலவும் மனிதக் கழிவகற்றல் பணியாளர் முறைகளைத் தடை செய்யும் சட்டத்தின் விதிகளை அமல்படுத்துகிறது.
  • இது 2013 ஆம் ஆண்டு மனிதக் கழிவகற்றல் பணியாளர்கள் பணியமர்த்தப்படுவதைத் தடைசெய்தல் மற்றும் மறுவாழ்வுச் சட்டத்தின் விதிகளை செயல்படுத்தும் முகமை ஆகும்.
  • துப்புரவுத் தொழிலாளர்களின் மேம்பாட்டிற்கான குறிப்பிட்டத் திட்டங்களை மத்திய அரசிற்குப் பரிந்துரைக்கவும், அவர்கள் மத்தியில் நிலவும் குறிப்பிட்டக் குறைகளை விசாரிப்பதற்கும், அவர்களின் பணி நிலைமைகளை ஆய்வு செய்து கண்காணிக்கவும் NCSK முகமைக்கு அதிகாரம் உள்ளது.
  • 1993 ஆம் ஆண்டு தேசியத் தூய்மைப் பணியாளர்கள் ஆணையச் சட்டத்தின் கீழ், 1994 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட முதல் NCSK ஆனது, இந்தச் சட்டம் 2004 ஆம் ஆண்டில் காலாவதியாகும் வரையில் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகச் செயல்பட்டு வந்தது.
  • அப்போதிருந்து, அதன் பதவிக் காலம் ஆனது அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு, சமூக நீதி அமைச்சகத்தின் கீழான ஒரு சட்டப்பூர்வமற்ற அமைப்பாகச் செயல்பட்டு வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்