மின் அமைச்சகத்தின் கீழ், தேசிய செயல்திறன் மிக்க சமையல் முறை திட்டம் (NECP) மற்றும் ஆற்றல் செயல்திறன் மிக்க மின்விசிறிகள் திட்டம் (EEFP) ஆகியவை தொடங்கப் பட்டுள்ளன.
NECP திட்டமானது, வழக்கமான சமையல் முறைகளுடன் ஒப்பிடும்போது 25 முதல் 30% வரையிலான செலவு குறைப்பினை வழங்குகின்ற தூண்டு மின்சுருள் அடிப்படையில் அமைந்த சமையல் அடுப்புகளை அறிமுகம் செய்வதில் கவனம் செலுத்துகிறது.
ஆற்றல் செயல் திறன் மிக்க மின்விசிறிகள் திட்டம் (EEFP) ஆனது, 1 கோடி மேற்கூரை மின்விசிறிகளை வழங்கும் நோக்கத்துடன், ஆற்றல் செயல் திறன் மிக்க BLDC வகை மின்விசிறிகளின் பயன்பாட்டினை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறது.