TNPSC Thervupettagam
April 1 , 2020 1573 days 614 0
  • கோவிட் – 19 தொற்றை எதிர்த்துப் போராடுவதற்காக மகாராஷ்டிர மாநில மருத்துவமனைகளினால் ஒரு புதிய தொழில்நுட்பமானது ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது.
  • இந்தத் தொழில்நுட்பமானது புனேவில் உள்ள ஒரு ஸ்டார்ட் அப் அமைப்பினால் உருவாக்கப்பட்டுள்ளது.
  • இந்தப் பொருளானது “சைடெக் ஏரோன்” (Scitech Airon) என்று பெயரிடப் பட்டுள்ளது.
  • இது ஒரு எதிர் அயனி ஆக்கி (உற்பத்தி) ஆகும்.
  • இந்தத் தொழில்நுட்பமானது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையினால் தொடங்கப்பட்டுள்ள நிதி பிரயாஸ் என்ற திட்டத்தின் கீழ் மேம்படுத்தப் பட்டுள்ளது.
  • இந்த சைடெக் ஏரோன் அயனியாக்க இயந்திரமானது 8 வினாடிகளுக்கு ஏறத்தாழ 100 மில்லியன் (1 வினாடிக்கு 10 அயனிகள்) எதிர் மின்னூட்டம் பெற்ற அயனிகளை உற்பத்தி செய்கின்றது.
  • இந்த அயனியாக்கத்தினால் உற்பத்தி செய்யப்படும் எதிர் மின்னூட்டம் பெற்ற அயனிகள் காற்றில் பரவும் துகள்கள், கொரானா அல்லது இன்புளூயன்சா வைரஸ், சிலந்தி ஒவ்வாமை, பாக்டீரியா, மகரந்தம், மாசுக்கள் போன்ற நுண்துகள்களைச் சுற்றி ஒரு தொகுப்பை உருவாக்குகின்றன.
  • இந்த எதிர் மின்னூட்டம் பெற்ற அயனிகள் “ஹைட்ராக்ஸில் ரேடிக்கல்ஸ் மற்றும் எச் ஓ” என்று அழைக்கப்படும் ஒரு சிறப்பாக எதிர்வினையாற்றும் OH என்ற குழுவை உருவாக்குவதன் மூலம் நிகழும் இரசாயன எதிர்வினையின் மூலம் அவற்றிற்குச் செயல்படாத ஒரு தன்மையை வழங்குகின்றன.
  • இவை ஒரு சிறந்த எதிர்வினையாற்றி ஆகும். இது வளிமண்டல தூய்மைப் பொருள் என்று அழைக்கப்படுகின்றது.
  • அயனியாக்கியால் உற்பத்தி செய்யப்பட்ட இந்தத் தூய்மை செய்யும் பண்பானது ஒவ்வாமை, வைரஸ், பாக்டீரியா ஆகியவற்றின் வெளிப்புற புரதத்தை உடைக்க உதவுகின்றது. இவை காற்றில் பரவும் நோயைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.
  • இது தொற்று நோய் மற்றும் தீங்கு விளைவிக்கக் கூடிய சுற்றுச்சூழல் காரணிகளிடமிருந்து உடலின் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
  • இந்த எதிர்ப்புச் சக்தியானது அயனி இல்லாத சூழ்நிலையில் அடுத்த 20 – 30 நாட்களுக்கு உதவியாக  இருக்கக் கூடும்.
  • மேலும் இது கார்பன் மோனாக்சைடு (கார்பன்-டை-ஆக்ஸைடை விட 1000 மடங்கு தீங்கு ஏற்படுத்தக் கூடியது), நைட்ரஜன் டை ஆக்ஸைடு, எளிதில் ஆவியாகின்ற கரிம வேதிப் பொருட்கள் போன்ற காற்று மாசுபாடுகளை போக்குகின்றது.
  • இந்தத் தொழில்நுட்பமானது சுற்றுப்புறத்தில் உள்ள வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சைத் தொற்றுகளை கட்டுப்படுத்த உதவுகின்றது. இது காற்றைத் தூய்மையாக்கி, கோவிட் – 19 பாதிப்புக்குள்ளானவர்கள் மற்றும் அறிகுறி உள்ளவர்களின் வசிப்பிடப் பகுதிகளைத் தூய்மையாக்க உதவுகின்றது.

இதுபற்றி  

  • மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையானது புத்தாக்கவியலாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்களுக்காக காப்பக மையங்களை அமைத்தல், நிதியைத் திரட்டுதல், செயல்படுத்துபவர்கள் மற்றும் கருத்தாக்கத்திற்கான ஆதாரம் ஆகியவற்றிற்கு நிதியளிக்கும் திட்டத்தின் கீழ் நிதி (NIDHI/National Initiative for Developing and Harnessing Innovations – புத்தாக்கங்களை மேம்படுத்துதல் மற்றும் திரட்டுதலுக்கான தேசிய முன்னெடுப்பு) என்ற திட்டமானது தொடங்கப் பட்டுள்ளது.
  • NIDHI திட்டத்தின் கீழ், பிரயாஸ் (PRAYAS/Promoting and Accelerating Young and Aspiring innovators & Startupsஇளம் மற்றும் ஆர்வமுள்ள புத்தாக்காக்கவியலாளர்கள் மற்றும் ஸ்டார்ட் அப்களை ஊக்குவித்தல் மற்றும் மேம்படுத்துதல்) என்ற திட்டமானது தொடங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்