TNPSC Thervupettagam

NPS மற்றும் APY திட்ட நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்து

September 7 , 2023 316 days 283 0
  • தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) மற்றும் அடல் ஓய்வூதிய திட்டம் (APY) ஆகியவற்றின் நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்கள் 10 லட்சம் கோடி ரூபாய் என்ற மைல்கல்லைத் தாண்டியுள்ளன.
  • இத்திட்டத்தின் மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கையானது 66.2 மில்லியனை (6.62 கோடி) எட்டியுள்ளது.
  • தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) தனியார், அடல் ஓய்வூதிய திட்டம் (APY), மற்றும் தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) லைட் ஆகியவற்றின் கீழான மொத்த நிதிகள் முறையே ரூ.47,663 கோடி, ரூ.30,051 கோடி மற்றும் ரூ.5,157 கோடி ஆகும்.
  • 2004 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதியன்று அல்லது அதற்குப் பிறகு இத்திட்டத்தில் இணைக்கப் பட்ட ஆயுதப்படை வீரர்களைத் தவிர, அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களைப் பெறும் வகையில் இந்தத் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது.
  • தேசிய ஓய்வூதியத் திட்டத்தினைப் பல மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன.
  • 2009 ஆம் ஆண்டு மே 01 ஆம் தேதி முதல், அனைத்து இந்தியக் குடிமக்களும் தானாக முன் வந்து பயன் பெறும் வகையில் இத்திட்டம் மாற்றப்பட்டது.
  • 2015 ஆம் ஆண்டு ஜூன் 01 ஆம் தேதியன்று, அடல் ஓய்வூதியத் திட்டம் தொடங்கப் பட்டது.
  • இது சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் வரம்பையும் செயல்திறனையும் கணிசமான அளவில் உயர்த்தியுள்ளது.
  • தற்போது, இதில் இணைவதற்கு வரி செலுத்தாத நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்