TNPSC Thervupettagam

NVS-02 - ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட்ட 100வது செயற்கைக்கொள்

February 1 , 2025 22 days 106 0
  • இஸ்ரோ விண்வெளி நிறுவனமானது, 2025 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் தேதியன்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து அதன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க 100வது ஏவுதலை மேற்கொண்டது.
  • NVS-02 செயற்கைக்கோளுடன் கூடிய GSLV-F15 ஏவு கலமானது, விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது.
  • NVS-02 ஆனது, NVS தொடரின் இரண்டாவது செயற்கைக்கோள் ஆகும்.
  • GSLV-F15 என்பது இந்தியாவின் புவி ஒத்திசைவு செயற்கைக்கோள் ஏவு வாகனத்தின் (GSLV) 17வது ஏவல் மற்றும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கிரையோ எஞ்சின் என்ற நிலை கொண்ட 11வது ஏவுதலாகும்.
  • இது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கிரையோஜெனிக் எஞ்சின் நிலை கொண்ட GSLV வாகனத்தின் 8வது செயல்பாட்டு ஏவலாகும்.
  • இங்கு 1979 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதியன்று, முதல் முறையாக ரோகிணி தொழில்நுட்பச் சாதனத்தினைச் சுமந்து செல்லும் செயற்கைக்கோள் ஏவு வாகனம்-3 (SLV-3 E10) என்ற ஏவு கலத்தின் சோதனை ஏவல் ஆனது மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்